Sunday, November 8, 2009

காதல் கவிதைகள்

உயிரை உருக்கி மையாக்கி இது
உனக்காய் எழுதும் ஒருகடிதம் - நெடு
கயிறாய் மாறிய காதலில் இருந்தெனை
காத்திட உன்னால் தான்முடியும்.

ஆயிரம் பெண்கள் நாள்தோரும் என்
விழிகளை உரசுவது - அதில்
அன்பே நீதான் இதுவரையில் என்
உயிரை உரசியது.